செவ்வாய், 6 ஜூன், 2017

ஓ.பி.எஸ்-ஐ முற்றுகையிட்ட மக்கள்! June 06, 2017

ஓ.பி.எஸ்-ஐ முற்றுகையிட்ட மக்கள்!


தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அரசு விரைவுப் பேருந்து உரிய நேரத்தில் வராததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பயணிகளை சமாதானப்படுத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தார். 

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து சென்னைக்கு இரவு 7 மணிக்கு அரசு விரைவுப் பேருந்து செல்வது வழக்கம். ஆனால் அந்த பேருந்து நேற்று இரவு 11 மணி வரையிலும் வராததால் இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்திருந்த 40 பயணிகள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தேனி திண்டுக்கல் சாலையில் சாலைமறியலில் ஈடுபட முற்பட்டனர். அப்போது  அவ்வழியாக  முன்னாள் முதல்வர் ஒ,பன்னீர்செல்வம் காரில் வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட பயணிகள் தங்கள் அவதியைத் தெரிவித்தனர்.  இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம், தேனி போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.  இதனைத் தொடர்ந்து  சாலைமறியலை அவர்கள் கைவிட்டனர். பின்னர் இரவு 11.30 மணி அளவில் பேருந்து வந்து சென்னை செல்லும் பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Posts:

  • LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ? கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயுசிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேச… Read More
  • பேஸ்புக் லைட்’டில் இணைய வேகம் குறைந்தாலும் ‘பேஸ்புக் லைட்’டில் பார்க்கலாம் கலிபோர்னியா: ஸ்மார்ட்போன்களில் 3ஜி, 4ஜி என இருந்தாலும், சில நேரங்களில் சிக்னல் பிரச்னை கார… Read More
  • SOMALIA ....சோமாலியா உனக்கு மனிதநேயம் இருந்தால் இதை Shareசெய்யுங்கள்.... இன்றைக்கு என்ன Special. சிக்கனா,மீனா மீன் வாங்கிர்டுமா இல்ல இன்னைக்கு மட்… Read More
  • Indian languages native tongue of 4.1 billion people (2/3 of world population). Apart from Hindi, the Indian languages in these are Bengali, Marathi, T… Read More
  • ஏமாற்று வேலை!!! ஏற்றுமதி வகுப்பு என்ற பேரில் ஏமாற்று வேலை!!! தமிழ்நாடில் தற்போது அதிக லாபம் தரும் தொழில் என்றால் அது ஏற்றுமதி இறக்குமதி பற்றி வகுப்பு எடுப்பது தா… Read More