
2014 பாஜக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் முன்னெடுத்த திட்டங்களில் ஒன்று கங்கை நதியைச் சுத்தம் செய்யும் திட்டம். பல கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் துரிதமாகச் செயல்படுத்தப்படும் என மோடி அரசு நம்பிக்கை தெரிவித்திருந்த போதிலும், தற்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கங்கை நதியை சுத்தம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்திருப்பது பலருக்கு இந்தத் திட்டத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இனி காணலாம்....
கங்கை நதி சுத்தமாகுமா?
2020 க்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று பிரதமராகப் பதவியேற்ற போது மோடி தெரிவித்திருந்தார்.
ஆனால் அக்டோபர் 2016 ல் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடையும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கங்கை நதியைச் சுத்தம் செய்ய பத்து வருடங்கள் எடுக்கும் என அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கங்கோத்திரி முதல் கங்கா சாகர் வரை பாதயாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
11 மே 2017 வரை கிட்டத்தட்ட ரூ.11 ஆயிரம் கோடி நதிநீர் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது .
1985-2015 வரையிலான காலகட்டத்தில் ரூ.4000 கோடி இத்திட்டத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
கங்கை நதி பாயும் 8 மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை நதியில் ஒரு துளி நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என தேசிய தூய்மை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆனால் இப்போதுவரை தினமும் 3000 லிட்டர் அளவில் அசுத்தமான நீர் கங்கையில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை நதி சுத்தமாகுமா?
2020 க்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று பிரதமராகப் பதவியேற்ற போது மோடி தெரிவித்திருந்தார்.
ஆனால் அக்டோபர் 2016 ல் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடையும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கங்கை நதியைச் சுத்தம் செய்ய பத்து வருடங்கள் எடுக்கும் என அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கங்கோத்திரி முதல் கங்கா சாகர் வரை பாதயாத்திரை செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
11 மே 2017 வரை கிட்டத்தட்ட ரூ.11 ஆயிரம் கோடி நதிநீர் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது .
1985-2015 வரையிலான காலகட்டத்தில் ரூ.4000 கோடி இத்திட்டத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
கங்கை நதி பாயும் 8 மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்கை நதியில் ஒரு துளி நீர் கூட சுத்தம் செய்யப்படவில்லை என தேசிய தூய்மை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆனால் இப்போதுவரை தினமும் 3000 லிட்டர் அளவில் அசுத்தமான நீர் கங்கையில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.