வியாழன், 8 ஜூன், 2017

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய முயற்சி! June 08, 2017

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய முயற்சி!


நாட்டிலேயே முன்னோடி முயற்சியாக, சென்னை மக்களுக்கு கல் குவாரியில் இருந்து இன்று முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. புழல், சோழவரம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகள் முற்றிலும் வரண்டு போயின. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் சிக்கராயபுரம், திரிசூலம், அனகாபுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில், கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை எடுத்து சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சென்னைக்கு இன்று முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

Related Posts: