செவ்வாய், 6 ஜூன், 2017

பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் NDTV! June 06, 2017

பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் NDTV!


என்.டி.டிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐயின் சோதனைக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஐசிஐசியை வங்கியிடம் பெற்ற கடனை  திருப்ப செலுத்துவதினால் வங்கிக்கு ஏற்பட்ட ரூ.48  கோடி இழப்பினை சுட்டி என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். இச்செயலை கண்டிக்கும் வகையில், என்டிடிவி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் பழைய பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சோதனை நடத்திப்பட்டுள்ளதாகவும், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் உள்ள இந்த சோதனையை கண்டு ஒதுங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், என்.டி.டிவிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள முன்னிலை ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்து வருகின்றனர். இந்தியா டுடே ராஜ்தீப் தேசாய், தி ஹிந்துவின் முன்னள் ஆசிரியர் என்.ராம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரவின் சாமி, ‘தி வையர்’ ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோரும் தங்கள் ஆதரவை தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.  என்டிடிவி செய்தி தொகுப்பாளர் ரவிஷ் குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிபிஐயின் சோதனையை எதிர்த்து கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.  மேலும்  என்.டி.டிவியின் வளர்ச்சியை தடுக்க நினைத்தால், பிரதமர் மோடியை  கேமரா முன்பு நேரலை பேட்டிக்கு வந்து கலந்து கொள்ளுமாறும் பதிவிட்டுள்ளார். மேலும், மூத்த என்.டி.டிவி ஊழியர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊடக உரிமை குரல்களை அமைதியாக்கும் முயற்சியே இந்த சோதனை திட்டம் என தங்கள் கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர். மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு முழு கடனை திருப்பி அளித்துவிட்டதாகவும், வங்கி சார்பில் இருந்து எந்த குற்றச்சாட்டும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்