செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

29 09 2021  தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டு காவல்துறையைப் பற்றிய அரிய தகவல்களை அறிவதற்காக, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையர் வளாகத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

178 ஆண்டுகள் பழைமையான கட்டிடத்தில், ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து காவல்துறை சார்ந்த பொருட்களும், கலைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காவல்துறை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து முதலமைச்சருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் விளக்கினர்.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

source https://news7tamil.live/cm-mk-stalin-today-inaugurated-the-tamil-nadu-police-museum.html