வியாழன், 23 செப்டம்பர், 2021

சென்னை விமான நிலையத்தில் தங்கும் அறைகள் தயார்: ஒரு மணி நேர வாடகை என்ன தெரியுமா?

 Rooms to stay at Chennai Airport for Transit passengers Tamil News : கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு, மக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கேற்ப சமீபத்தில் அங்குள்ள அதிகாரிகள் ஒரு வசதியை உருவாக்கியுள்ளனர்.

ஆம், பயணிகள் இப்போது சில மணிநேரங்களுக்கு ஒரு அறையை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது விமான நிலைய வளாகத்தில் உள்ள முனையத்திற்கு வெளியே ஒரு நாளுக்கு ஒரு அறையை முன்பதிவு செய்யலாம்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு அருகில் அமைந்துள்ள சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தின் தரை தளத்தில் பயணிகளுக்கான அறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு 20 அறைகள் உள்ளன.

ஒரு மணி நேரத்திற்கு, வாடகை ரூ.350 மற்றும் நான்கு மணி நேரம் மற்றும் அதற்கு மேல் இருந்தால் ரூ.1,200 ஆகும். 12 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து உள்ளவர்கள், அவர்கள் ஒற்றை அல்லது இரட்டை ஆக்கிரமிப்பைத் தேர்வு செய்யலாம், அதன் கட்டணம் ரூ.2,300 மற்றும் ரூ.2,800. மேலும், கூடுதல் வரி கட்டணமும் உண்டு.

இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் திட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன், முனையத்தின் உள்ளே அறைகள் இருந்தன. விமான நிலையத்தில் முனையங்களை இடிக்கத் தொடங்கிய பிறகு, அறைகளை வழங்க முடியவில்லை. ஆனால், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அங்குள்ள அதிகாரிகள் தங்கவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இந்த புதிய வசதிகள் குறித்து இன்னும் பல பயணிகளுக்குத் தெரியாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

source https://tamil.indianexpress.com/tamilnadu/rooms-to-stay-at-chennai-airport-for-transit-passengers-tamil-news-344466/