வெள்ளி, 29 ஜூலை, 2022

அடுத்தடுத்து நடக்கும் கொலை.. பதற்றத்தில் கர்நாடகா..!

 

கர்நாடக மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 23 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன் நெட்டர் (32) என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது அந்த மாநிலத்தில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சாகீர் மற்றும் முகமது சஃபீக் என்னும் இருவரை கர்நாடகா போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டே நாள்களில் மங்களூர் மாவட்டம், சுரத்கல் பகுதியில் 23 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாசில் என்ற முஸ்லிம் இளைஞரை நேற்று இரவு அடையாளம் தெரியாத 3-4 இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மங்களூர் சிட்டி போலீஸ் கமிஷனர் சஷிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இரவு 8 மணியளவில் சில மர்ம நபர்கள் பாசிலை பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கியுள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது மிகவும் பதற்றமான பகுதி. அதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலையான பாசிலுடன் வந்த ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறார். அவரிடம் புகார் வாங்கியிருக்கிறோம்.
அவரை கொலை செய்தவர்கள் யார், உள் நோக்கம் என்ன போன்றவை குறித்து விசாரித்து வருகிறோம்.

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இன்று ஒருநாள் மங்களூர் மாநகரில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் மூட சொல்லி உத்தரவிட்டிருக்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால், முஸ்லிம் தலைவர்களை வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட சொல்லியுள்ளோம். விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/23-year-old-muslim-man-killed-in-mangaluru-section-144-imposed.html

Related Posts:

  • வெள்ளை மாளிகையில் ஹிஜாப்... அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் செய்யும் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார்..அதுவும் பல்வேறு ரகசியங்கள் க… Read More
  • மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.… Read More
  • நீ ஒரு தேச துரோகி. லலித் மோடி தப்பி ஓட்டம். விஜய் மல்லையா தப்பி ஓட்டம் கச்சா எண்ணை குறைந்தும் அம்பானிகளுக்காக பெட்ரோல் டீசல் விலை குறையாமை. அதானிக்காக இந்தியன் வங்… Read More
  • தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை! தொழுகையில் நிதானத்தை கடைபிடிப்போம்! நாம் இருக்கும் மாதம் சங்கை மிகு … Read More
  • மாமரத்தின் மருத்துவக் குணங்கள் சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போ… Read More