சனி, 23 ஜூலை, 2022

மிக பிரமாண்டமாக அரங்கேறும் செஸ் ஒலிம்பியாட்

 

22 7 2022 

Chess Olympiad 2022: here’s all you need to know
The Napier Bridge in Chennai has been decorated to celebrate the International Chess Olympiad in the city. (Image credits: @pk_views/Twitter)

44th Chess Olympiad 2022 Tamil News:  44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) புதிய ஏலதாரர்களைத் தேடத் தொடங்கியது. மற்ற நாடுகளை விட இந்தியா முதலிடம் பிடித்தது மற்றும் முதல் முறையாக உயர்மட்ட நிகழ்வை நடத்தும் வாய்ப்பை வென்றது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு என 92 கோடி ரூபாய் ஒதுக்குவதாக தெரிவித்தார்.

கடந்த ஜூன் 19 அன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி மாமல்லபுரத்திற்கு வருவதற்கு முன் நாட்டிலுள்ள 75 நகரங்களுக்கு தீபம் கொண்டு செல்ல இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பு கூட்டம் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், தங்குமிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம், தண்ணீர் மற்றும் மின்சாரம், சாலை வசதிகள் போன்ற பிற வசதிகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சியை பரவலாக விளம்பரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முழுவீச்சில் விளம்பரங்கள்:

இந்த மெகா நிகழ்வுக்கு அதிகபட்ச விளம்பரத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘தம்பி’ மற்றும் சின்னமும் வெளியிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின், ‘நம்ம சதுரங்கம், நம் பெருமை’ என்ற விளம்பர வாசகங்கள் அடங்கிய பேருந்துகளை, நகரம் முழுவதும் பயணிக்க கொடியசைத்து துவக்கி வைத்தார்.

The grand inaugural ceremony featuring the rich culture and tradition of Tamil Nadu will be attended by Prime Minister Narendra Modi, Chief Minister M K Stalin and other special invitees at Nehru Indoor stadium on July 28.

இந்நிகழ்ச்சியின் டீஸர் வீடியோவை வெளியிட்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே முதன்முறையாக 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

செஸ் வண்ணம் பூசப்பட்ட நேப்பியர் பாலம்: சென்னை முழுவதும் வலம் வரும் தம்பி

விக்னேஷ் சிவன் இயக்கிய டீஸர், மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள நகரின் பிரிட்டிஷ் காலத்து நேப்பியர் பாலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களிலும் படமாக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ள வீடியோ சதுரங்கப் பலகையைப் போன்ற பின்னணியில் அமைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள முழு பாலத்திற்கும் மேக்ஓவர் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சின்னத் தம்பி நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட், ஈசிஆர் மற்றும் பிற பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் விழா விவரங்கள் அடங்கிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

The Chennai Metro train was decorated with information about the Chess Olympiad event. (Source: CMRL)

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பிற நகரங்களில், நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

தம்பியுடன் செல்ஃபி எடுத்து, டிக்கெட்டை வெல்லுங்கள்

இந்நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்காக, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் திறப்பு விழாவிற்கான டிக்கெட்டுகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற, தம்பியுடன் செல்ஃபி படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் இடுகையிடுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்ட சில போட்டிகளையும் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஒலிம்பியாட் போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

https://tickets.aicf.in./ என்கிற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இரண்டு விளையாட்டு அரங்குகள் உள்ளன. ஹால் 1 மற்றும் ஹால் 2. ஹால் 1 க்கான விலைகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் இது சிறந்த தரவரிசை அணிகளைக் கொண்டிருக்கும் (திறந்த நிலையில் 28 பலகைகள் மற்றும் பெண்கள் பிரிவில் 1).

ஹால் 2ல் போட்டியைக் காண, ஒருவருக்கு டிக்கெட் விலை ரூ.2,000, வெளிநாட்டவருக்கு ரூ.6,000. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் 200 ரூபாய் சலுகை விலையில் டிக்கெட் பெறலாம்.

முதல் தரவரிசை அணிகள் இடம்பெறும் ஹால் 1க்கான டிக்கெட்டின் விலை ரூ.3000, அதேசமயம் வெளிநாட்டவர் ரூ.8,000 செலுத்த வேண்டும். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தள்ளுபடி டிக்கெட் விலை ரூ.300.

பார்வையாளர்களுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறை

பார்வையாளர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு பிறகே, போட்டி நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டி அரங்கிற்குள் அலைபசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்களின் கேஜெட்களை கவுன்டரில் டெபாசிட் செய்யலாம்.

ஒலிம்பியாட் போட்டிக்கு இலவச பேருந்துகளை இயக்கும் தமிழக சுற்றுலாத்துறை

வருகிற திங்கள்கிழமை முதல், மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்காக ஐந்து ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்துகளை இலவசமாக இயக்க தமிழக சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (டிடிடிசி) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, பேருந்துகள் மத்திய கைலாஷில் இருந்து சேவையைத் தொடங்கி, ராஜீவ் காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு இயக்கப்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

“ஹாப்-ஆன்-ஹாப்-ஆஃப் பேருந்து சேவைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டன. இப்போது இந்த ஒலிம்பியாட் உடன் இணைந்து அவற்றை மீண்டும் தொடங்குகிறோம். நாங்கள் 19 நிறுத்தங்களைக் கண்டறிந்துள்ளோம், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பார்வையாளர்களை அழைத்துச் செல்ல மொத்தம் ஐந்து பேருந்துகள் பயன்படுத்தப்படும், மேலும் இது இலவசம், ”என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கடலோர நகரத்தில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷாக்களை ‘சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஆட்டோக்கள்’ என மறுபெயரிட தமிழக சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. ஏறக்குறைய 25 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அடையாளம் காணப்பட்டு அவை புதிய வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இயக்குநர் நந்தூரி கூறுகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் துறையானது நடத்தைப் பயிற்சி அளித்து வருவதாகவும், இதனால் பயணிகள் குறிப்பாக ஓட்டலில் சிக்கல்களை அனுபவிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்குச் செல்லும் இடங்களைப் பற்றிய துணுக்குகளை ஓட்டுநர்கள் வழங்குவார்கள்.” என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/sports/chess-olympiad-2022-heres-all-you-need-to-know-483117/