வியாழன், 13 ஜூலை, 2023

சென்னை மற்றும் புறநகரில் இரவு முதல் மழை..!!

 13 7 23

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர்,  வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்யவாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
இந்நிலையில்,தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இரவு சுமார் 11 மணிக்கு மழை தொடங்கி சற்று பலமாக பெய்தது. அதனைத் தொடர்ந்து  அதிகாலை முதல்  தூறலுடன்  மழை பெய்து வருகிறது.  காலையில் மழை சற்று ஓய்ந்துள்ளது.
ஜூலை 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://news7tamil.live/rain-since-night-in-chennai-and-suburbs.html

Related Posts: