ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி 4 மீனவர்கள் காயம்: ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிப்பு

 

fisherman boat

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் காயமடைந்த மீனவர்கள் சிவசங்கர், செல்வா, ராஜகோபால், தனசேகரன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலுக்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-fishermen-attacked-by-srilankan-pirates-6846753