புதன், 7 ஜூன், 2017

இந்தியாவில் பெருகும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை! June 07, 2017




மேற்குவங்கம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்திருப்பது, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அரிசியால் சமைக்கப்பட்ட சோற்று உருண்டை ரப்பர் பந்து போல எகிறுவதைக் கண்டு இது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

மேலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதேபோல் மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி நகரின் பல இடங்களிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Related Posts: