வியாழன், 3 டிசம்பர், 2015

தலைநகரை நோக்கி திருச்சி TNTJ...!!


மழை வெள்ளத்தில் மூழ்கிய சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட மழை வெள்ளம் பாதிக்கப்படாத மாவட்டத்திலிருந்து தொண்டர்கள் தலைநகரை நோக்கி வருமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் அறிவித்தது.
தலைமையின் அறிவிப்பு வந்தவுடன் திருச்சி TNTJ யிலிருந்து நூற்றுக்கணக்கானோர் பல்வேறு வாகனங்களில் தலைநகரை நோக்கி புறப்பட்டு விட்டனர்.
சென்னை வாழ் இந்து, கிறித்தவ சொந்தங்களே...
நாங்கள் தேசத்திற்கு சேவை செய்ய ராணுவத்தில் இணைய முயன்றோம்,
கல்வியும், இட ஒதுக்கீடும் இல்லாத காரணத்தினால் ராணுவத்தில் புறக்கணிக்கப்பட்டோம்,
இதனால் TNTJ வில் இணைந்தோம்,
ராணுவத்திற்கு நிகராக சமுதாயத்திற்கும் உழைக்கிறோம், நாட்டிற்கும் உழைக்கிறோம்...
நாங்கள் மட்டுமல்ல, மாநிலம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய படைகள் சென்னையை நோக்கி புறப்பட்ட வண்ணம் உள்ளது.
எங்களுடைய தொப்புள் கொடி உறவே! கலங்காதே!!
இதோ புறப்பட்டு விட்டோம் தலைநகரை நோக்கி பெரும் படையாக !!
Kaalaimalar's photo.

Related Posts: