புதுச்சேரி: பிரெஞ்சு அரசின் உயரிய 'செவாலியர்' விருதை சிவாஜி, கமல் ஆகிய இரு தமிழர்கள்தான் பெற்றுள்ளதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் கமலுக்கு முன்பே தமிழ் பேராசிரியர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசு இந்த விருதை வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம்.. சினிமா ஒளிவெள்ளம், பிற துறைகளை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது. 1995ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, பிரான்ஸ் அரசு, செவாலியர் விருது அறிவித்தபோதுதான், அதன் கவுரவம் குறித்து தமிழர்கள் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கும் செவாலியர் விருதை அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசின் கலாசாரத்துறை. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிவாஜிக்கு பிறகு, செவாலியர் விருது பெறும் 2வது தமிழர் கமல் என முன்னணி நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், கமலுக்கு பல வருடங்கள், முன்பே தமிழ் பெண்மணி ஒருவர் இந்த விருதை பெற்றார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது. அந்த பெண்மணி பெயர் மதன கல்யாணி. புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்தான், மதன கல்யாணி. பிரெஞ்சு மொழியி்ல் முதுகலையும், தமிழில் புலவர் பட்டமும் பெற்று, இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர். இந்த அறிவை கொண்டு, இரு மொழிகளிலும் 20க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். 'புதுச்சேரி நாட்டுப்புற கலைகள்', சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆகிய நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துள்ளார். இவரது பணிகளை பாராட்டியே செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதன கல்யாணி கூறுகையில், "அந்த காலத்தில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுகாரர்கள் பிரஞ்சு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். இரு மொழிகளையும் நானும் கற்றேன். எனவேதான் மொழி பெயர்க்க முடிந்தது. இரு மொழிகளிலும் நூல்கள் எழுத முடிந்தது" என்கிறார். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், செவாலியர் விருதைவிட கவுரவம்மிக்கது 'ஒபிசியே' விருது. இந்த விருதையும் பிரான்ஸ் அரசு மதன கல்யாணிக்கு கொடுத்துள்ளது. இவ்விருதை பெற்ற முதல் இந்திய பெண் மதன கல்யாணிதான் என்பது தமிழினத்தின் பெருமை. அதை தெரியாமல் இருந்தது தமிழனின் அறியாமை. மதன கல்யாணியின் கணவர், சண்முகநாதன் கூறுகையில், செவாலியர் விருதை, சிவாஜி வாங்கியதால் பிரபலமானது. ஆனால், ஒபிசியே விருதை பிரான்ஸ் அரசு தானாக முன்வந்து மதன கல்யாணிக்கு கொடுத்தது. இதை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது என்றார். இத்தம்பதிகளுக்கு 3 பிள்ளைகள். மூவரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். மதன கல்யாணியை புதுச்சேரி அரசு கவுரவிக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
திங்கள், 29 ஆகஸ்ட், 2016
Home »
» கமலுக்கு முன்பே செவாலியர் விருது பெற்றுள்ளார் ஒரு தமிழ் பெண்!
கமலுக்கு முன்பே செவாலியர் விருது பெற்றுள்ளார் ஒரு தமிழ் பெண்!
By Muckanamalaipatti 10:59 AM
Related Posts:
குடும்பத்தினருடன் தாஜ்மகாலை பார்வையிட்ட கனடா பிரதமர்! February 18, 2018 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலை இன்று பார்வையிட்டார். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடியோ ஒரு வார கால பயணமாக இந்தியாவ… Read More
திரிபுரா சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! February 18, 2018 திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.திரிபுரா சட்டப்பேரவையில் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நட… Read More
இந்தியா - ஈரான் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! February 18, 2018 டெல்லியில் பிரதமர் மோடியை, ஈரான் அதிபர் ரூகானி சந்தித்துப்பேசினார். இதனைத்தொடர்ந்து, இருநாடுகள் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐ.நா.பாத… Read More
'ஆதிக்கச் சாதி பெண்களை காட்டிலும் தலீத் பெண்கள் சீக்கிரம் மரணிக்கின்றனர்!''- ஐநா அறிக்கை! February 18, 2018 உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துவோம்: பாலின சமத்துவத்தை 2030-க்குள் கொண்டுவருவோம்' என்ற தலைப்பின் கீழ் ஐநா சபை ஓர் ஆய்வை 90 நாடுகளில் நடத்தி&nb… Read More
பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மலைப்பாதையை அடைத்த கேரளா! February 18, 2018 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சம்பக்காட்டில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மலைப்பாதையை, கேரள வனத்துறையினர், திடீரென அடைத்துள்ளனர். இ… Read More