திங்கள், 29 ஆகஸ்ட், 2016

#இந்தியருக்கு_நாடுகள்_கடந்து_உதவ_முன்வந்தார்_பஹ்ரைன்_மன்னர்

பஹ்ரைன்: #Bahrain
#இந்தியருக்கு_நாடுகள்_கடந்து_உதவ_முன்வந்தார்_பஹ்ரைன்_மன்னர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இறந்த
தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற செய்தி உலகையே உலகியது.
இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் #Khalifa_bin_Salman_Al_Khalifa முன்வந்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில்:
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் #தனா_மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு நாடுகடந்த மனிதநேய உதவி கிடைக்கும்.