ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 5 பேர் கைது !


மகாராஷ்டிரா மாநிலம் அம்பெர்நாத் என்ற பகுதியில், சட்டவிரோதமாக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூசுப் ஷேக் என்பவரின் கடையில் சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த மாட்டிறைச்சி, பசு மாடு, எருமை மாடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, யூசுப் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.