புதன், 31 ஆகஸ்ட், 2016

வட மாநிலங்களில் கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வட மாநிலங்களில் கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகளான லோதி ரோடு, விஜய் சவுக், ஆர்.கே. புரம், சரோஜினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக, டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன. இதனிடையே, டெல்லி வர வேண்டிய விமானம் ஒன்று, ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, டெல்லியில் உள்ள 3 வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று செல்வதாக இருந்தது. எனினும், மழை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.