புதன், 31 ஆகஸ்ட், 2016

துபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய துபை தமுமுகவினர்...


-----------------------------------------------
ஆம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக, ஏஜெண்ட் மூலம் நேற்றைய முன்தினம்(29/8/16) துபை வழியாக சென்றார்.
செல்லும் வழியில் துபையில் ஒரு அறையில் இரவு தங்கியுள்ளார், அப்போது அவரோடு இருந்த ஏஜண்டுகள் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஆம்பூரில் உள்ள தனது மகனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். எப்படியாவது தன்னை மீட்குமாறும் கூறியுள்ளார்.
உடனே அவரது மகன் என்னை தொடர்பு கொண்டார்,
நான் தமுமுகவின் அமீரக துணைச் செயலாளர் சகோ. ஹூஸைன் பாஷா மற்றும் துபை மமக செயலாளர் சகோ.A.S.இப்ராஹிம் ஆகியோரது தொடர்பு எண்ணை கொடுத்து பேச சொன்னேன்.
அந்த பெண் ஒரே முறை மட்டும் தான், தனது மகனை தொடர்பு கொண்டு இருந்தார், அதுவும் NET மூலம் பேசியிருக்கிறார். வேறு எந்த தொடர்பு எண்ணும் இல்லை,
ஆனாலும் நமது சகோதரர்களின் தொடர் முயற்சியால், அந்த பெண்ணை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்களோடு பேசி, அவரை மீட்டு, அவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறி, சிறை தொகையை செலவுக்கு வழங்கி, சென்னைக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
துரிதமாகவும் பொறுப்பாகவும் செயல்பட்ட அமீரக செயலாளர் அண்ணன் அப்துல் ஹாதி, ஹூஸைன் பாஷா, A.S.இப்ராஹிம், அஹ்மத் கான், கள்ளக்குறிச்சி காதர் அலி மற்றும் துபையை சேர்ந்த தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மை மறுமையில் இதற்கான நற்கூலி வழங்குவானாக.
(ஏஜண்டுகளை நம்பி, அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, இவரைப் போல் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இனிமேலாவது கவனத்துடன் செயல்பட வேண்டும்.)
V.R.நசீர் அஹ்மத்.
மாவட்ட செயலாளர்.
தமுமுக. (வே.மே.)