மத்திய அரசின் புதிய கல்வி கொள்ளை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த இந்த கல்விக்கொள்கையில், 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்க்ப்பட்டது. ஆனால் அந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தினால், பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும் என்றும்,, மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற திட்டம் பின்வாங்கப்படும் என்பதால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படும் என்று கூறி தமிழகத்தின் எதிர்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள்என அனைவரும் கடுமையான எதிர்த்தன.
மேலும் இந்த புதிய கல்விக்கொள்கையில், இந்தி, சமஸ்கிருதத்தைத் மொழிகளை கட்டாயமாக்கப்பட்டதால், தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இந்த புதிய கல்விக்கொள்கையை கடுமையான எதிர்த்தது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்திருந்தார்.ஆனால் தற்போது இந்த கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து கல்வி அமைச்சர்அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், இக்கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தேன். ஆனால், இந்த கடிதத்திற்கு மத்திய அரசு எவ்வித பதிலும் அளிக்காமல் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தியது.
இதனால்தான் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.
ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத்தும், தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-new-education-policy-meeting-ignorance-tamilnadu-304136/