சென்னையில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது. பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கள் நடைபெற உள்ளது. இதற்காக செஸ் ஒலிம்பியாட் தீபத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் இதற்கான இலச்சினையையும் அறிமுகப்படுத்தப்பட்டது. செஸ் விளையாட்டில் இருக்கும் நைட் போல ஒரு குதிரை வேஷ்டி, சட்டை அணிந்து இருப்பது போன்ற வடிவத்தை தமிழ்நாடு அரசு வடிவமைத்து வெளியிட்டது.
https://twitter.com/i/status/1547950359116582915
source https://news7tamil.live/44th-chess-olympiad-teaser-release.html