17 07 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18/07/2022) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனக்கு சோர்வு மற்றும் காய்ச்சல் இருந்ததால், கொரோனா சோதனை செய்ததாகவும்,இதைத்தொடர்ந்து தனக்கு தொற்று இருக்கிறது என்பது உறுதியானது என்றும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து கொரோனா தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெவித்தனர். இது தொடர்பான அறிக்கையும் வெளியானது.
இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாகவும். அவரது தனிமைப்படுத்தல் காலம் முடிந்துவிட்டதால் அவர் நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-will-discharge-tomorrow-kaveri-hospital-press-release-480620/