செவ்வாய், 26 மே, 2026

மதரஸாக்கள் பற்றிய அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்து பெண்

 

















மதரஸாக்கள் பற்றிய அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்து பெண் ஆசிரியர்: சமூக வலைத்தளங்களின் பொய் முகத்திரை கிழிந்தது!

மதரஸாக்களைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் எதிர்மறையான கதையாடல்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மதரசாவில் பணிபுரியும் இந்து பெண் ஆசிரியை ஒருவர் அங்குள்ள உண்மை நிலவரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

ஊடகங்களிலும், யூடியூப் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைத்தளங்களிலும் மதரஸாக்களைப் பற்றி காட்டப்படும் எதிர்மறையான செய்திகளைப் பார்த்து ஆரம்பத்தில் தானும் அச்சமடைந்ததாகக் கூறும் அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அங்கு பணியாற்றி வரும் தனது நேரடி அனுபவத்தின் மூலம் அந்தப் பொய் மூட்டைகளைத் தவிடுபொடியாக்கியுள்ளார்.

மதரஸாக்களில் உருது, ஹிந்தி, ஆங்கிலம், கணிதம் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் முறையாகக் கற்பிக்கப்படுவதாகவும், அங்கு கல்வி மட்டுமே பிரதானமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அங்கு தீவிரவாதமோ அல்லது வெறுப்புணர்வோ கற்பிக்கப்படவில்லை என்பதற்கு மாணவர்களின் கல்வியின் மீதுள்ள பெரும் ஆர்வமே சாட்சி என்று கூறும் அவர், தனக்கு அங்கு முழு பாதுகாப்பு இருப்பதாகவும், சக ஆசிரியர்களும் மாணவர்களும் தன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பெண் பிள்ளைகளின் கல்விக்காகவே தான் அங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும், மதரஸா மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறி, மதரஸாக்கள் குறித்த இந்துத்துவவாதிகளின் போலிப் பிரச்சாரங்களின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

வீடியோ மற்றும் அதன் தமிழாக்கம் முதல் Comment ல் இணைக்கப்பட்டுள்ளது !



source fb page Islam Album