வியாழன், 2 பிப்ரவரி, 2017

கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் !


சென்ற வாரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான சண்முகநாதனின் அந்தப்புற லீலைகள் வெளியாக நாடே நாறியது – அதற்குள் ஒரு கள்ளக்காதல் தற்கொலையும் அதைக் கொலையாக மாற்றி கலவரத்தைத் தூண்ட முயற்சித்த தமிழக காவிகளின் இன்னொரு முயற்சியும் அம்பலமாகியுள்ளது.
ஆனாலும் ஒரு விசயத்தை இங்கே ஒப்புக் கொள்ளவேண்டும். கள்ளக்காதல் தெரியவந்ததால் ஊருக்கும், உறவுக்கும் பிரச்சினை என்று முடிவு செய்து மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார். அப்படி தெரிந்தாலும் நான் யோக்கியன் என்று சங்கராச்சாரி, நித்யானந்தன் போல மூடர்களை நம்ப வைக்க முடியும் என்பதோடு, அந்த நம்பிக்கைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கும் மோடி எனும் இந்துத்துவா செக்யூரிட்டி சர்வீஸ் இருப்பதால் சண்முகநாதன் தற்கொலை செய்யவில்லையோ என்னமோ!