புதன், 1 பிப்ரவரி, 2017

பட்ஜெட் தாக்கம்: ஸ்மார்ட்போன்கள் விலை உயருகிறது

மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படும் சர்க்யூட் போர்டுகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் பிரிண்டட் சர்க்யூர்ட் போர்டுகளுக்கு (PCB) 2 சதவீத கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவில் இந்த போர்டுகளின் செலவு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் ஆகும். உள்நாட்டு பிசிபி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். இன்றைய சூழலில் இந்திய சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள பிசிபிக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts:

  • Free Heart Surgery Read More
  • 365 நாளில் மோடியின் சாதனை இதுதான் சாதனை~~~~~~~~~~~~~~~~~~~~~ 365 நாளில் மோடியின் சாதனை என்னவென்று பார்த்தால்365 விதமாக ஆடை அணிந்ததுதான்...! வேறு எந்தப் பிரதமரும் செய்… Read More
  • நூதன கான்கிரீட் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர்.இதிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகி … Read More
  • இயற்கைவழி கோழி பண்ணை இன்று கோழி பண்ணை என்றவுடன் நம் எண்ண கண்களில் தோன்றுவது, நாலு சென்டில் கம்பி வலைகளால் சுற்றி வளைத்து கட்டப்பட்ட ஒரு கட்டிடம் உள்ளே சில … Read More
  • 786 " 786 " என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறி… Read More