வியாழன், 11 மார்ச், 2021

14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்


திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில்¸ தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில், அங்கு பணியாற்றிய 14 குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு¸ அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.



source : https://www.facebook.com/tnpoliceofficial/photos/a.1660780884226979/2487796531525406/