ஞாயிறு, 21 மார்ச், 2021

கொரோனா அதிகரிப்பு: தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

 கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 22ம் தேதி முதல் 9,10,11 வக்குப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோன வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறத்

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.

அண்மையில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் டொடர்ந்து, தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-schools-leave-from-march-22nd-for-9th-10th-11th-standards-284674/

Related Posts:

  • ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற… Read More
  • ஆப்பிளை விட விட கொய்யா உசத்தி...... நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்த… Read More
  • மத சார்பற்ற கட்சி என்றால் இந்தியாவில் மத சார்பற்ற கட்சி என்றால் இந்தியாவில் பா.ஜ.க தான் என்ற ராஜ்நாத் சிங் கூறிய கருத்துக்கு !!! சாணியில் முக்கிய செருப்பால் அடித்த பதிலடி!! ‪#‎இந்து… Read More
  • மக்கள் என்ன முட்டாளா? கேபினட் ஒப்புதல் வாங்காமலேயே 15 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் மோடி. இதனை இந்திய முதலாளிகள் பாராட்டுகின்ற… Read More
  • மியன்மர் தேர்தல் கேலிக்கூத்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் பிடியில் இருந்த மியன்மரில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சி கட்சி நான்கில் முன்று ப… Read More