சனி, 20 மார்ச், 2021

தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; இன்று மனுக்கள் பரிசீலனை

20.03.2021 தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தது; இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மொத்தம் 4554 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியாக இருக்கக்கூடிய பாமக பொருளாளர் கசாலியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவின் துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களுக்கு 500 ரூபாய் வழங்கக்கூடிய காட்சிகள் பதிவான வீடியோ வெளியாகியிருக்கிறது. இது, தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்திருக்கிறது. பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில்  அதிமுக பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


source : https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-election-live-updates-chennai-tamil-nadu-politics-corona-eps-stalin-modi/