சனி, 17 ஏப்ரல், 2021

தமிழகத்தில் ஒரே நாளில் 8449 பேருக்கு கொரோனா: மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் அதிகரிப்பு

 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்  மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் முக்கவசம், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழத்தில் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கி வந்த கொரோனா தொற்று பாதிப்பு இன்று 8 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,71,384 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 33 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 2,636 பேருக்கும், செங்கல்பட்டு 795 பேருக்கும், கோவையில் 583 பேருக்கும், திருவள்ளூரில் – 453 பேருக்குமு, காஞ்சிபுரத்தில் – 303 பேருக்கும், தூத்துக்குடியில் 277 பேருக்கும், திருச்சியில் 273  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-covid-19-update-all-district-crossed-8-thousand-292680/

Related Posts:

  • சத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்! வீடு வீடாகச் சென்றும், மக்கள் கூடும் இடங்களிலும், பேருந்துகளிலும், எலக்ட்ரிக் ரயில்களிலும் நாம் செல்லும் இடங்களிலெல்லாம், “இயேசுவே இரட்சகர்” … Read More
  • “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்; குண்டு வீசி கொல்ல வேண்டும்; வெடிகுண்டு கிடைக்காவிட்டால் நாங்களே வெடி குண்டு தருகின்றோம்; அல்லது வெடிகுண்டுகளை தய… Read More
  • Jobs ஏக இறைவனின் திருப்பெயரால்...புரைதா மற்றும் ஜித்தாவில் இயங்கும் TVS கார்கோ நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை:லேபர்கள், டிரைவர்கள், சேல்ஸ்மேன்கள் தொடர்பு கொள்… Read More
  • Hadis தொழுபவருக்குக் குறுக்கே சொல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது (நாட்கள் அல்ல… Read More
  • முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான முஸாஃபர் நகர் படுகொலைக்கு காரணமான பா.ஜ.க, எம்.எல்.ஏ. தேர்தல் பிரச்சாரகராக நியமனம். கலவரத்தை தூண்டி விடும் வகையில் போலி வீடியோ வெளியிட்டதாகவும், ப… Read More