திங்கள், 26 ஏப்ரல், 2021

மோசமான சூழலில் இந்தியா; கையிருப்பு வைத்தும் தடுப்பூசிகளை பயன்படுத்தாத அமெரிக்கா

 Amid concerns in India and Brazil, the unused vaccine stockpile in US : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொள்கின்றோம். இந்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இந்திய மக்களுக்காகவும், முன்கள பணியாளர்களுக்காகவும் அதிக ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி ப்லிங்கன் ஞாயிறு அன்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.

தடுப்பூசிகளை சமமாக வழங்க அமெரிக்கா மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வந்த நிலையில் இந்த ட்வீட் வெளியானது. தடுப்பூசி சமநிலை குறித்து வெளியாகும் பிரச்சாரத்தில் சமீபத்தில் மில்லியன் கணக்கில் தேக்கம் அடைந்திருக்கும் அஸ்ட்ரெஜெனாகா மருந்து குறித்தும் குறிப்பிடப்பட்டது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாட்டினருக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் முதல் தொழில் அதிபர்கள் என பலரும் பைடன் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர்.

இந்த கையிருப்பு என்ன?

பொது சுகாதார பள்ளி, ப்ரவுன் பல்கலைக்கழகம், ஆஷிஸ் ஜாவின் கூற்றுப்படி, 35 முதல் 40 மில்லியன் டோஸ்களை அமெரிக்கர்கள் பயன்படுத்தமாட்டார்கள். கடந்த கோடை காலத்தில் அமெரிக்காவும் அஸ்ட்ராஜெனெகாவும் 300 மில்லியன் டோஸை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தடுப்பூசிகள் வெளிவருவதற்கான காலம் அதிகம் எடுத்துக் கொள்ளப்பட்டது. , மேலும் பல பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கவலைகளால் மறைக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை திசை திருப்புவது தொடர்பாக எழுந்துள்ள வாதங்கள் என்ன?

ஏப்ரல் ஆரம்பத்தில் அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபௌசி, அமெரிக்காவிற்கு ஆஸ்ட்ரஜெனெகா மருந்து தேவைப்படாது என்றும், எஃப்.டி.ஏவால் இதற்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. ஐரோப்பாவில் இந்த தடுப்பூசிகள் காரணமாக பெண்களுக்கு ரத்த உறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டதால் அனுமதி மேலும் தாமதமாக்கப்பட்டது. இது அனுமதி பெற்ற சமயத்தில் அமெரிக்காவில் அனைத்து இளம் பிராயத்தினரும் தடுப்பூசியை பெற்றனர். அந்த சமயத்தில் மூன்று பல்வேறு தடுப்பூசிகள் அமெரிக்காவில் இருந்தன.

அமெரிக்கா நான்கு மில்லியன் ஆஸ்ட்ரஜெனகா டோஸ்களை மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்உ வழங்கியது. மார்ச் 22ம் தேதி அன்று ஆஸ்ட்ரஜெனகா அமெரிக்க சோதனையை முடித்தது. அப்போது, என்ன? நான் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து அக்கறை செலுத்தவில்லையா? எஃப்.டி.ஏ ஆஸ்ட்ரெஜெனகாவிற்கு அனுமதி அளித்த நேரத்தில் எங்களிடம் நிறையை தடுப்பூசிகள் இருக்கும். ஜனவரியில் இந்த சோதனை முடித்திருந்தால் பரவாயில்லை. மே மாதம் எங்களுக்கு இது தேவையில்லை என்று ஜா ட்வீட் செய்திருந்தார். அந்த மருந்துகளை இந்தியாவிற்கு அனுப்புகிறோம் என்றூ ஹார்வர்ட் மருத்துவ பிரிவின் துணை பேராசிரியர் ஆடம் கஃப்னே ட்வீட் பதிவிட்டார்.

அமெரிக்க வர்த்தக சபை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதன் நிர்வாக துணைத் தலைவர் “இந்த தடுப்பூசி அளவுகள் அமெரிக்காவில் தேவையில்லை, அங்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடிய அளவுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. . இந்த நடவடிக்கை அமெரிக்க தலைமையை உறுதிப்படுத்தும், இதில் கோவாக்ஸ் போன்ற முயற்சிகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுகின்றோம். ஏன் என்றால் நாம் அனைவரும் அதிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இல்லை என்று குறிப்பிட்டது.

மேலும் படிக்க : ப்ளான் B : நாள் ஒன்றுக்கு 6 லட்சம் பேருக்கு தேவையான ஆக்ஸிஜனை உருவாக்க திட்டம்

அமெரிக்கா பதிலுக்கு என்ன கூறியது?

சனிக்கிழமை அன்று ராய்ட்டர்ஸிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், இந்திய அரசுக்கு தேவையான உதவிகள் துரித கதியில் நடத்தப்படும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்றும் கூறினார். இது அஸ்ட்ராசெனெகா மருந்துகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஒரு நாடு, தற்போது தன்னுடைய சொந்த நாட்டில் மோசமான சூழலை சந்தித்து வருகிறது என்று வெள்ளை மாளிகையில் இந்தியாவின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.

பௌசி இது குறித்து பேசிய போது, சி.டி.சி. தற்போது அவர்களுக்கு உதவி வருகிறது. மற்ற நாடுகளும் இதே போன்ற சூழலில் இருக்கின்றன. அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற சூழலில் நாங்கள் அனைவருக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம். இது எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமெரிக்க கோவிட் -19 பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜீயண்ட்ஸ் மேலும் கூறியதாவது: “குவாட் கூட்டாண்மை மற்றும் குழு நாடு முழுவதும் உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், இது ஒரு உலகளாவிய தொற்றுநோய் என்று உங்களுக்குத் தெரியும், எல்லா இடங்களிலும் தொற்றுநோயை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான ஆபத்தை இந்தியா தற்போது வெளிக்காட்டுகிறது. அதனால்தான் நாங்கள் கோவாக்ஸில் மிகப்பெரிய முதலீடு செய்தோம், மேலும் தடுப்பூசி விநியோகத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் விநியோகத்தைச் சுற்றியுள்ள நம்பிக்கை அதிகரிக்கும் போது, நாங்கள் அது குறித்து ஆராய்வோம் என்று அவர் கூறினார்.

அமெரிக்கா நிர்வாகத்தின் மீது வைக்கப்படும் பிற அழுத்தங்கள் என்ன?

சீரம் நிறுவனம், மூலப் பொருட்கள் மீத் அமெரிக்கா விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கூறினார். அது கோவோவாக்ஸிற்காகவே தவிர கோவீஷீல்டிற்காக இல்லை என்ரு பிறகு அந்நிறுவத்தின் தலைமை செயல் இயக்குநர் பூனவல்லா கூறினார்.

று கார்னகி இந்தியா, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன், ஐ.டி.எஃப்.சி நிறுவனம் மற்றும் தக்ஷாஷிலா உள்ளிட்ட சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு, இந்த மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு சட்டத்தை இந்தியாவிற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

மூன்றாவது முன்னணியில், உற்பத்தியை விரைவுபடுத்துவதற்காக உலக வர்த்தக அமைப்பில் காப்புரிமை தள்ளுபடியை ஆதரிக்க அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தடுப்பூசிகள் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

தற்போது அளவுக்கு அதிகமாக பெரும் பணக்கார நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அவை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெறப்பட்டதாகும்.

ப்ளூம்பெர்க்கின் தடுப்பூசி டிராக்கரின் கூற்றுப்படி, அதிக வருமானம் பெறும் நாடுகள் மிகக் குறைந்த நாடுகளை விட 25 மடங்கு வேகமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றன. உலகின் தடுப்பூசிகளில் 22.9% அமெரிக்காவில் உள்ளது, ஆனால் உலக மக்கள் தொகையில் 4.3%மட்டுமே. சீனாவில் முறையே 21.9% மற்றும் 18.2%, மற்றும் இந்தியா 13.8% மற்றும் 17.7% என டிராக்கர் தெரிவித்துள்ளது. அனைத்து தடுப்பூசிகளிலும் கிட்டத்தட்ட பாதி உலக மக்கள்தொகையில் 16% ஆக உள்ளது. உலகின் ஏழ்மையான 92 நாடுகளின் மக்கள்தொகையில் 60% கூட இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தடுப்பூசி போட முடியாது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்தியா மக்கள் தொகையில் 8% முதல் டோஸ் மற்றும் 1% இரண்டாம் டோஸ்களை போட்டுள்ளது. பிரேசில் 12% க்கும் குறைவான மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/explained/amid-concerns-in-india-and-brazil-the-unused-vaccine-stockpile-in-us-295887/