புதன், 26 ஏப்ரல், 2023

ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

 25 4 23 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி போரசிரியர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படத்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி புகார் அளித்தார்.

அதன்கீழ் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல்
தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த
போலீசார், ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது,
பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு
வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு
பொய் புகார் கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு என்று விசாரணை
வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக
விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் எனவே அது குறித்து முழுமையாக விசாரணை
நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். தற்போதைய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் விசாரணை செய்த மாநில மகளிர் ஆணையம், அரசுக்கு அளித்த அறிக்கையில் மாணவிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் இந்த புகார்களை தெரிவிக்கும் மாணவிகள் மிரட்டப்பட்டு இருப்பதாகவும், பலர் புகார் அளிக்க பயந்து சென்றுள்ளதாகவும் புகார்க்கு முகந்திரம் உள்ளது. எனவே இந்த புகாரின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு மேல் விசாரணைக்கு செய்ய வேண்டும் என அறிக்கை அளித்து இருப்பதாகவும் அதன் அடிப்படையிலும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், பழிவாங்கும் நோக்கில் தங்களுக்கு
எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் எந்தவிதமான சட்ட
வாய்ப்புகளையும் வழங்காமல் கைது நடவடிக்கைகளை காவல்துறை செய்துள்ளதாகவும்
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நீதிமன்றம் விதிக்கின்ற
நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என
வாதிட்டார்.

இதே போன்று புகார் அளித்த மாணவிகள் மற்றும் மாநில மகளிர் ஆணையம் தரப்பின்
ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீடடு மனு தாக்கல் செய்யப்பட்டன. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி
உத்தரவிட்டார்.


source https://news7tamil.live/kalashetra-affair-the-court-dismissed-professor-hari-padmans-petition.html