புதன், 26 ஏப்ரல், 2023

பி.டி.ஆர் ஆடியோ சர்ச்சை:

 

25 4 23

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. . இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இது மோசடியாக தயார் செய்யப்பட்டது என குறிப்பிட்டார். இந்த சர்ச்சை முடிவடையாத நிலையில், அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக மீண்டும் ஒரு டேப்  ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பி.டி.ஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-seeks-cbi-investigation-on-ptr-purported-audio-650512/