9 5 23
என்எல்சி படிவத்தில் முறையான ஒப்புதல் இன்றி கையெழுத்து வாங்க முயற்சித்த திமுக கவுன்சிலரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு கரிவெட்டி கிராம மக்களிடம் ‘எங்கள் பகுதி மனை மற்றும் நிலங்களை நாங்கள் அளக்க சம்மதிக்கிறோம்’ என்ற நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட படிவத்தை காட்டி, கையெழுத்து வாங்கும் முயற்சி திமுக கவுன்சிலர் தலைமையில் நடைபெற்றது
இதனை அறிந்த கரிவெட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திமுக கவுன்சிலரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு மற்றும் வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும் என கூறி கரிவெட்டி கிராம மக்கள் திமுக கவுன்சிலர் மற்றும் ஊராட்சி செயலரை திருப்பி அனுப்பினர்.
நிலம் மற்றும் மனை அளவீடு செய்வதற்கான படிவத்தில் நில எடுப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் என்எல்சி அதிகாரிகள் நேரில் சென்று, கிராம மக்களிடம் ஒப்புதல்
பெற்ற பின் கையெழுத்து வாங்க வேண்டும். இந்நிலையில், என்எல்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட படிவத்தில் திமுக கவுன்சிலர் கையெழுத்து வாங்க முயற்சி செய்த சம்பவம் , அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
source https://news7tamil.live/karivetty-villagers-had-an-argument-with-the-dmk-councilor-and-there-was-a-commotion.html