வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மக்கள் தொகை கணக்கெடுப்பு


2011- ஆம் ஆண்டில் மத ரீதியிலான எடுக்கப்பட்ட‪#‎மக்கள்_தொகை_கணக்கெடுப்பு‬ 2015-இல் இந்துமதவாத ‪#‎பாஜக‬ என்கிற‪#‎மத்திய_அரசு‬ வெளியிட்டிருக்கிறது. இதை இந்து ஊடகங்கள் "இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று தலைப்புச் செய்தியாக வெளியிடுகின்றன.
‪#‎அம்பேதக்கர்‬ கூறுகிறார்:
"மக்கள் தொகை எண்ணிக்கையைக் கொண்டு ‪#‎அரசியல்_ஆதாயங்கள்‬பெறும் பொருட்டு, இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சூழ்ச்சியும், ஏமாற்று வித்தையும், பொய்யும், புனை சுருட்டும் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளன." - [தொகுதி:17]
‪#‎மோடி‬ அரசும் இன்று இதைத்தான் செய்கிறது. நேற்று மங்களூரில் இந்து பெண்ணுடன் இஸ்லாமிய இளைஞர் பேசினார் என்பதற்காக பா.ஜ.க. வினரால் கடுமையாக தாக்கப்பட்ட ‪#‎செய்தி‬ ஊடகங்களில் வெளிவந்தன.
இதே பா.ஜ.க வினர் ‪#‎ஆகஸ்ட்_15‬ சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டிலுள்ள‪#‎ஷேசாலம்‬ ‪#‎அகரம்‬ கிராமத்தில் தீண்டப்படாத மக்கள் என்று ‪#‎இந்து‬ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் இந்து சின்னங்கள் எரியுட்டப்பட்ட போதும் பா.ஜ.க வினரும் இந்து ஊடகங்களும் எங்கே ஒளிந்திருந்தார்கள்? சுயமதப் பாசம் அப்போது எங்கே இருந்தது?
இன்று மத கணக்கீட்டில் பெரும்பான்மை மதத்திற்கு ஆபத்து என்று மதவாத தீவிரவாத அரசு அறிக்கை வெளியீட்டதும் அதை நாட்டின் பூதாகரமான பிரச்சனையாக பேசும் ஊடக விபச்சாரர்களின் மதப் பற்று பீறிட்டெழுகிறது. இதுவா ‪#‎பத்திரிக்கை_தர்மம்‬?
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்று இஸ்லாமியர்களை தாக்கும் போது இந்துக்கள் அல்லாத தீண்டப்படாதவர்களை இந்துக்களின் எண்ணிக்கைக்குள் திணித்து இந்தியாவின் இந்துப் பெரும்பான்மை குறித்து பீற்றிக் கொள்ளும் இந்திய அரசும் / இந்தியாவும் தான் ‪#‎மதச்சார்பற்ற_நாடு‬ என்றால், அதை நம்புகிறவர்களுக்கு சுயசோதனை செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தைதான் பா.ஜ.க.வினர் கொடுத்திருக்கிறார்கள். இந்திய மக்களே இந்துக்களாக சித்திக்காதீர்கள் இந்தியர்களாக / மனிதர்களாக சிந்தித்துப் பாருங்கள். பயங்கரவாத அரசின் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது விளங்கும்.
------------
அம்பேதக்கரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சிந்தனை:
"ஆங்கிலேயர் ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடிமதிப்பு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு ஒரு சமயம் மிகவும் எளிதானதாகவும் சுவாராசியமற்றதாவுமே இருந்தது. இது விஷயத்தில் யாரும் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. குடிமதிப்புக் கணக்கு அதாவது சென்சஸ் என்பது எல்லோருக்குமே முதல் தர அக்கறைக்குரிய விஷயமாகி விட்டது.
இந்துக்கள் தங்கள் எண்ணிக்கையை பெருக்குவதற்கு தீண்டப்படாதவர்களையும் இந்துக்கள் என்று கூறும்படி மிரட்டப்பட்டன ர். குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது யாரும் சாதியை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டனர்.
இந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்களும் குடிமதிப்புக் கணக்கெடுப்பை மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்சமயம் இந்தியாவில்அரசியல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகி விட்டது. மக்கட் தொகை எண்ணிக்கை பலம்தான் ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது ‪#‎அரசியல்‬ ஆதாயங்கள் பெறத் துணை புரிகிறது. இது உலகில் வேறெங்கும் நடைப்பெறாத ஒன்றாகும்."

________
மக்கள் தொகை விவகாரத்தில் பாசிச பயங்கரவாதிகள் விரித்து வைத்துள்ள வலையில் தானாகவே சிக்கும் முஸ்லிம்கள்.....!
*************************************************************************************************
கடந்த 10 ஆண்டுகளில் """""முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் வீழ்ச்சி"""" இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இருக்கிறது.
# மத்திய சென்செக்ஸ் புள்ளி விபரத்தின் அடிப்படையில் THE HINDU.
உண்மை இவ்வாறிருக்க "இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு; முஸ்லிம்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகம்" என்னும் 'பாசிச பிரச்சாரம்' தெளிவாக 2 விஷயங்களை குறிவைத்து பரப்ப படுகிறது.
1) "இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகின்றது; இப்படியே குறைந்து கொண்டே போனால் நமது இந்து சமுதாயமே இல்லாமல் போய் விடும்;
இந்துக்களை அழிப்பதற்கே முஸ்லிம்கள் இப்படி அதிகமாக குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்; அவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற எங்களை விட்டால் வேறு யாருமில்லை என்று அறிவிற்கும் - நடைமுறைக்கும் பொருந்தாத நஞ்சு சிந்தனைகளை இந்துக்களின் மனதில் விதைத்து, "இந்து - முஸ்லிம் நிரந்தர வெறுப்பு - பகை - பிரிவு" ஆகியவற்றை ஏற்படுத்திவிடுவது.
பின்பு இந்த பிரிவினைகளையும் - குழப்பங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அவைகளை அப்படியே ஓட்டுகளாக அறுவடை செய்து கொள்வது.
2) "முஸ்லிம்கள் அதிகமாக குழைந்தைகள் பெற்று கொள்கிறார்கள்; எனவேதான் அவர்கள் கல்வியிலும் - பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கிறார்கள்; அவர்கள் மீது அரசு மிகவும் பரிவு காட்ட விரும்புகிறது" என்று R.S.S.-ன் வெறிபிடித்த உறுப்பினராக இருக்கும் ஒரு மத்திய அமைச்சரை "முதலை கண்ணீர்" வடிக்க செய்து -
முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே நாங்கள் இத்தைகைய அற்புதமான சட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம் என்று நயவஞ்சக விளக்கம் கொடுத்து -
முஸ்லிம்களை அடிமட்டத்திலிருந்து அறுத்தெடுக்கும் "அபாயகரமான சட்டங்களை" இயற்றி -
என்ன நடக்கிறது என நாம் புரிந்து கொள்வதற்குள் "சட்டப்படியே" நமக்கு பெரும் இழப்புகளை தருவது.