புதன், 12 ஆகஸ்ட், 2015

காவல்துறை விசாரனை என அழைத்து சென்று இன்று வரை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தவில்லை

முத்துப்பேட்டையை சேர்ந்த வாசீம் கான்
கடந்த பத்து நாட்களாக காவல்துறை விசாரனை என அழைத்து சென்று இன்று வரை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தவில்லை , விடுதலை செய்து வீட்டுக்கும் அனுப்பவில்லை முத்துப்பேட்டை காவல்துறை ..
வாசீம் கான் குற்றம் செய்து இருந்தால் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்க வேண்டுமே ஒழிய காவல் நிலையத்தில் வைத்து கொடுமையான முறையில் தாக்கி சித்திரவதை செய்ய கூடாது என்ற தார்மீக அறிவு கூட காவல்துறைக்கு
இல்லாமல் போவது ஏன் ?
வாசீம் கான் உயிருடன் தான் இருக்கின்றாரா ?
அல்லது ஆம்பூர் ஷமீல் அமீது போலவும் ,
எஸ்.பி.பட்டினம் சையதை போலவும்
கொன்று விட்டார்களா என்ற சந்தேகம்
மக்கள் மத்தியில் உள்ளது ..
காவல்துறை உடனே வாசீம் கான் விஷயத்தில்
தகுந்த நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோருகின்றது ..
இந்திய தேசிய லீக் கட்சி's photo.