புதன், 12 ஆகஸ்ட், 2015

MK -பட்டி , தனியார் வங்கி ATM ல் கொள்ளை முயற்சி

முக்கண்ணாமலைப்பட்டியில் பரபரப்பு நேற்று , தனியார் வங்கி ATM ல் கொள்ளை முயற்சி

நமது ஊரில் நேற்றிரவு 2.30 AM , வழக்கம் போல் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் திருடன் ஒருவன் தனியார் வங்கி ஏ.டி.எம்-ன் வெளிபக்க பூட்டினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று உள்ளான்.ஏடிஎம் மையத்தில் பவரை முழுவதுமாக துண்டித்துவிட்டு ஏடிஎம் மிஷினை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்து உள்ளான்(மிஷினை உடைத்தது உறுதி பட தெரியவில்லை தகவல் கிடைத்தது). அந்த நேரத்தில் நேரத்தில் போலீஸார்வரவே திருடன் ஓட்டம் பிடித்துள்ளான். பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தந்து வேறு ஒரு பூட்டை கொண்டு ஏடிஎம் மையத்தை பூட்டியுள்ளனர். பின்பு இன்று காலை விசாரணையை துவங்கி உள்ளனர்.விரைவில் கொள்ளையன் பிடிபடுவான் என நம்பிக்கை தெரிவித்துள்ளானர்.
குறிப்பு:
இதுவரை சிறு சிறு திருட்டு சம்பவங்கள் மட்டுமே நடந்த நமது ஊரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி என்பது நமது ஊரில் பாதுகாப்புமின்மையை காட்டுகிறது.எப்போழுதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நம்மையும் நமது உடமைகளையும் வல்ல ரஹ்மான் பாதுகாத்து அருள்வானாக ஆமீன்...

இந்த  சம்பவம் குறித்து , செய்தி தாளில்  வராமல்  - காவல் துறை ,  ரகசியமாக வைக்க  காரணம்  என்ன ??? 

தகவல்  உதவி :FB  Muckanamalaipatti Page