வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

தீண்டாமை கொடுமை : 500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!


ஆகஸ்ட் 8-ல் நாடாளுமன்றத்துக்கு எதிரே 'கலிமா' சொல்லும் நிகழ்ச்சி..!!
ஹரியானா மாநிலத்தின் 'ஹிசார்' கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
உயர்ஜாதி ஹிந்துக்களின் கொடுமை காரணமாக 'பகானா' என்ற கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இஸ்லாத்தில் இணையும் தேதியை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ள 'பகானா சன்கர்ஷ் சமிதி' என்ற தலித் அமைப்பு, இஸ்லாத்தில் இணையும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று டெல்லி 'ஜந்தர் மந்தர்' மைதானத்தில் ஒன்றுகூடிய தலித்துகள், உயர்ஜாதி ஹிந்துக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.