புதன், 12 ஆகஸ்ட், 2015

''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?''

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம்
கேட்டார்;
''நீங்கள் ஏன் பெண்களிடம் கை
குலுக்குவதை தவறு என்று சொல்லி
தடுக்கின்றீர்கள்?''
முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு
எலிஸபெத் ரானியின் கரங்களை
உங்களால் குலுக்க முடியுமா ?
அதற்கான அனுமதி உங்களுக்குக்
கிடைக்குமா...?''
அவசர அவசரமாக மறுத்தார் அந்த
ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்?
அவர்கள் மகாராணியாயிற்றே....!''
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ
சொன்னார்; ''எங்களைப்
பொருத்தவரை
எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.
அந்த மகாராணிகளுக்கு
உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது
கரங்களை தொட முடியும்.' எனவேதான்
அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம்
பெண்ணும் கை குளுக்குவதை
நாங்கள் அனுமதிப்பதில்லை