வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

14 முறை செத்து பிழைத்த இந்தியாவின் உண்மையான ஹீரோ.

H V krishnaprasad's photo.

எந்த நிழல் கதா நாயகனும் செய்யாததை நிஜத்தில் செய்தவர். ஆசிஷ் சதுர்வேதி.
இவர் செய்தது என்ன?
வியாபம்’ என்றால் என்ன பொருள் எனப் பலருக்குத் தெரியாது.
ஆனால் ஊழலும், 35 மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் சிலருக்கு தெரியும்.
‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என ஊடகங்கள் சொல்கின்றன.
மத்தியப் பிரதேச அரசுப்பணி நியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய ஆஷிஷ் சதுர்வேதி என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்!
ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல்களில் தப்பி, நம்பிக்கை மனிதராக நடமாடிக் கொண்டிருக்கிறார். மிக சாதாரண உடல் தோற்றத்துடன். ஒரு பழைய சைக்கிளில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் குவாலியரில் வலம் வரும் 26 வயது இளைஞர் ஆஷிஷ் சதுர்வேதியைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் எழும், ‘இவரா? இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
இவர் முதலில் நம்மை போல் ஒரு சாதாரண மனிதராக தான் இருந்தார். பெரிய போராளியாகவோ, புரட்சியாளராகவோலாம் இல்லை. 2009 இல் சதுர்வேதியின் அம்மா புற்று நோயால் பாதிக்கபட்டார். ஆரம்ப நிலை. இன்று புற்று நோய் தீர்க்கமுடியாத ஒரு நோய் அல்ல என்பது. ஓரளவு படித்தவர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. தனது அம்மாவை சதுர்வேதி மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் தாய் இறந்து உள்ளார். அப்பொழுது தான் சதுர்வேதியின் மனதில் லேசான சந்தேகம் வர ஆரம்பித்தது. அவர் துருவி, துருவி, துருவி, துருவி செய்த விசாரணையில்.அங்கிருந்த மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ அறிவுகூட இல்லாதது கண்டு அதிர்ந்தார் சதுர்வேதி. பலருக்கும் குத்துமதிப்பாகவே சிகிச்சை நடந்திருக்கிறது.
சாதாரண மருந்துக்கடை விற்பனையாளருக்கு மருந்துகள் பற்றித் தெரியும் விஷயங்கள்கூட அறியாமல் இவர்கள் எப்படி மருத்துவப்படிப்பு முடித்து வந்திருப்பார்கள் என கேள்வி எழுந்தது.
எத்தனை அப்பாவிகள் இந்த அரைகுறைகளால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்! இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என விசாரணையை ஆரம்பித்தேன்’’ என்கிறார் சதுர்வேதி.
அங்குப் பழக்கமான ஒரு மருத்துவ மாணவரோடு நெருங்கிப் பழகியதில் உண்மைகள் தெரிந்தன...
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மத்தியப் பிரதேசத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். உண்மையான மாணவர்களுக்கு பதிலாக வேறு யாரோ தேர்வு எழுதுவார்கள். இப்படி ஆள் மாறாட்டம் செய்வதில் எல்லோருக்கும் பங்கு! தேர்வு நடக்கும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் இருக்க, அந்த மாணவர் எங்காவது சினிமா பார்த்துக் கொண்டிருப்பார். ‘‘ஒரு திரைப்படம் பார்த்தால் மருத்துவப்படிப்புச் சேர்க்கை கிடைப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான்’’ என சொல்லி வேதனையுடன் சிரிக்கிறார் சதுர்வேதி.
இது ஊழலின் ஒரு துளிதான்... மாணவர்கள் போய் விடைத்தாளை வாங்கி, எதுவுமே எழுதாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க, வேறு இடத்தில் வைத்து அதை யாரோ ஒரு பேராசிரியர் எழுதி முடிப்பார்.
ஒன்றுமே தெரியாத ஒரு நபர், முதல் மதிப்பெண் வாங்கி நல்ல கல்லூரியில் சேர்க்கை பெறுவார். இப்படி மோசடி நடந்தது வெறுமனே மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு மட்டுமில்லை. பொறியியல் கல்லூரிச் சேர்க்கை... அரசு வேலைகளுக்கான தேர்வுகள்... என சகல மட்டத்திலும் இதே ஆள்மாறாட்டம் நடைபெற்றன. நுழைவுத் தேர்வு மையங்கள், கலந்தாய்வு நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டி, 2013ம் ஆண்டில் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் போனார் சதுர்வேதி.
ஆனால், அவனோ, ‘இந்த நெட்வொர்க்கில் நீயும் சேர்ந்தால் நல்ல பங்கு சம்பாதிக்கலாம்’ என பேரம் பேசினான்.
அங்கிருந்து விலகி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அணுகினார் சதுர்வேதி. இதேபோல வேறு மூன்று பேர் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொடுத்த புகார்களும் அந்த அதிகாரி கையில் இருந்தது. இவ்வளவு அப்பட்டமாக மோசடி செய்ய முடியுமா?’ என்ற அவநம்பிக்கை மனதில் சூழ, அந்த உயர் அதிகாரி அரைமனதோடு ஒரு நுழைவுத் தேர்வு மையத்துக்கு திடீர் சோதனை நடத்தச் சென்றார்.
ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பலர் சிக்கினர். அதன்பின் ஒவ்வொன்றாக முழு பூதமும் வெளியில் வந்தது...
இது எவ்வளவு பெரிய ஊழல் என்பது சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் புரியும்...
இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது 1930 பேர்...
இன்னும் 500 குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர்... மாநிலக் கல்வி அமைச்சர் சிறையில் இருக்கிறார்... இதுவரை மர்ம மரணம் அடைந்தது 36 பேர்... அதாவது. இந்த ஊழலை வெளிபடுத்த முயன்று அதற்க்காக சமூக விரோதிகளால் கொல்லப்பட்டவர்கள். 36 பேர். தவறான சிகிச்சையால் மரணம் அடைந்தவர்கள். கணக்கில் அடங்கா........ தவர்கள்.
‘‘இப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடக்கிறது...
இதுவரை இந்த ஊழலின் சூத்திரதாரிகளை போலீஸ் நெருங்கவில்லை. அதனால் விசாரணை எப்படிப் போகும் என்பது தெரியவில்லை.
இதில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பு இருக்கிறது.
"மர்ம மரணங்களுக்குப் பின்னணியை போலீஸ் ஆராயவில்லை’’ என்கிறார் சதுர்வேதி.
இந்த ஊழலை அம்பலப்படுத்திய தினத்திலிருந்து இவருக்குக் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு கேட்டபோது, ‘மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் பாதுகாப்பு தருவோம். இல்லாவிட்டால் எங்கும் வெளியில் வராமல் வீட்டில் இரு’ என பதில் தந்தது போலீஸ். பிறகு, நீதிமன்றம் உத்தரவிட்டதும் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. சதுர்வேதி ஒரு மிதிவண்டியில் போக, அவருக்குப் பாதுகாப்பாக ஒரு காவலர் இன்னொரு மிதிவண்டியில் வருகிறார். அந்த காவலர் கண்ணெதிரிலேயே ஆறு முறை சதுர்வேதி மீது தாக்குதல் நடந்தது. வேடிக்கை மட்டுமே பார்த்தார் காவலர்.
‘‘இப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை எனக்கு வாழ்நாள் முழுவதும் தரச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம்கூட என்னை கண்டம் துண்டமாக வெட்டிப் போடப் போவதாக, என் பாதுகாப்புக்கு வரும் காவலரிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள் சிலர்.
மரணம் பற்றி எனக்கு பயமில்லை. 14 முறை பிழைத்துவிட்டேன்.
அடுத்த மர்ம மரணம் எனக்கு நிகழலாம். ஆனால் அதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்த வேண்டும்...பாஜக முதல்வர் சிவராஜ் உட்பட! இல்லாவிட்டால் என் ஐந்து ஆண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்!’’ நீண்ட பெருமூச்சோடு சொல்லி விட்டு மிதிவண்டியை மிதிக்கிறார் ஆஷிஷ்.
ஆளும் வர்க்கம் செய்யும் தவறுகளை தொடர்ந்து பல நடுநிலை வாதிகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்று காங்கிரஸ் ஆளும் வர்க்கம். இன்று பாஜக. ஆளும் கட்சி செய்யும் Current Bribe, Corruption, Scam முதலானவைகளை பற்றி தான் முதலில் பேச வேண்டும். எப்பொழுது பாஜக பற்றி விமர்சித்தாலும். சில வெண்ணைகள் சொல்லும் பதில். 10 வருடம் காங்கிரஸ் ஆண்டு கொண்டு இருந்த பொழுது எங்கே போனீர்கள் என்று. அட வெண்ணைகளா. நாங்க அப்ப காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்தோம். இப்பொழுது பாஜகவையும் எதிர்க்கிறோம். காங்கிரஸ்சின் செராக்ஸ் காப்பியாக தான் பாஜக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இன்னொன்று. பாஜகவை விமர்சிப்பவர்கள் அனைவரும் ஹிந்து மத விரோதிகள் என்று RSS டிரௌசர் பாய்ஸ் குரூப் சொல்கிறார்கள். என் கேள்வி.
பேரிலேயே சதுர் வேதங்களை உடைய ஆசிஸ். என்ன கத்தோலிக்க கிருஸ்துவரா? ஷியா முஸ்லிமா? சன்னி முஸ்லிமா?
வடக்கு அளவு தெற்க்கு. குறிப்பாக தமிழ் நாடு கெட்டு போகாதது. ஒரு விதத்தில் நமக்கு ஆறுதல் அளிக்க கூடிய ஒன்று. ஆனால் அங்கு நடந்தது இங்கு நடக்க எவ்வளவு? நேரம் ஆகும். இலவசங்களுக்கும், டாஸ்மார்க்கிற்கும் அடிமைகளாக உள்ள தமிழர்கள் விழித்து எழ வேண்டும். கலெக்டர் சகாயம் போன்ற ஒருவர் நமக்கு முதல்வராக வர வேண்டும்.
ஆனால் பல முட்டாள் தமிழர்கள்.  கட்சிகளின் அடிமைகள் என்பது கசப்பான உண்மை.
ஆசிஷ் சதுவேதியை பற்றி உலகிற்கு தெரியபடுத்திய Ndtv க்கு என் நன்றி.