செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

இந்து மக்களைக் காக்க நாங்கள் எதுவும் செய்வோம்


ஆம்பூர் கலவரம் பற்றி வாய் கிழிய பேசிய இந்து, பாஜக கட்சி தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
விழுப்புரம் சேசாச்சலம் கிராமத்தில் ஒரு இந்து கடவுள் சிலையை சுமந்து சென்ற தேர் எரிக்கப்பட்டுள்ளது. தெரியுமா உங்களுக்கு?
இந்துக்களின் தேர் பவனி நிறுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது.
எங்கே போனீர்கள் இந்து மதக் காவலர்களே?
இந்து மக்களைக் காக்க ஒரு இலட்சம் வேல் கொடுப்போம் என கொக்கரித்த அர்ஜுன் சம்பத் எங்கே?
ஆம்பூரில் தடையை மீறி கைதான அர்ஜுன் சம்பத் எங்கே?
திருவல்லிக்கேணியில் பிள்ளையார் சிலை ஊர்வலம் செல்ல தடையை மீறி கைதான வீரத்துறவி(?) ராமகோபாலன் அய்யர் எங்கே?
பூணுலுக்கு பொங்கிய புண்ணிவான்கள் எங்கே?
இந்து மக்களைக் காக்க நாங்கள் எதுவும் செய்வோம் என்று உளரிக்கொண்டிருக்கும் எச். ராஜா எங்கே?
எங்கே போனார்கள்? மோடியுடன் அரேபியாவிற்கா?
அவர்கள் என்ன பிண ஊர்வலமா சென்றார்கள்?
கோயில் திருவிழா நடத்தி தேர் ஊர்வலம் தானே சென்றார்கள்?
சாலையில் நடக்கக் கூடாதென்றால் அந்த சாலைகளில் அவர்களுக்கு உரிமையில்லையா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? என்ன சுதந்திரம்?