ஞாயிறு, 8 மே, 2016

முதலீடு இல்லாத தொழில் என்றவுடன் நிறைய பேர் ஆர்வமுடன் வருகின்றனர். தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவரின் மனதிலும் இருக்கிறது. சந்தோசம், சரி வாருங்கள் தொழில் தொடங்கலாம் என்றவுடன் அவர்கள் காணமல் போகிறார்கள். இங்கு அனைவரும் எண்ணத்தில் உறுதியாக இருந்தால் மட்டுமே போதாது செயலில் ஈடுபட்டால் மட்டுமே வருமானம் என்ற ஒன்றை கண்ணால் காண முடியும் என்ற எதார்த்தமான உண்மை பலருக்கும் தெரிவதில்லை.
வேலைக்கு செல்லும் மனநிலை வேறு, தொழில் செய்யும் மனநிலை வேறு..
1. என்னை மூளை சலவை செய்து விடுவார்கள் இதற்கு ஒரே பதில் தான் உண்டு. கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும் தவறாக நினைக்க வேண்டாம் என்னை யார் வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள் என்று எண்ணுபவர்கள் தொழில் செய்ய முடியாது. எதை கேட்டாலும், எதை செய்தாலும் என்னுடைய முடிவுதான் என்ற உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன்னை எந்த இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.
2. நான் ஏமாந்து போய்விடுவேன் அல்லது ஏமாற்றிவிடுவார்கள்
என்னை தவிர யாரும் என்னை ஏமாற்ற முடியாது என்ற தன்னம்பிக்கை இல்லை என்றால் பார்க்கும் அனைவரிடமும் ஏமாற வேண்டியது உங்களை சார்ந்தது மட்டுமே.
3. எனக்கு இதில் ஆர்வம் இல்லை.. அதில் ஆர்வம் இல்லை ஆனால் பணம் சம்பாரிக்க வேண்டும்.
நேர்மையாக முன்னேற வேண்டும் என்றால் குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உழைப்பு மட்டுமே உங்களை வெற்றியின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்பது தான் உண்மை.
நான் கொடுக்கும் தொழில் செய்ய விரும்புபவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொண்டால் போதும்.. மற்றவர்கள் மன்னிக்கவும்....
ஏனென்றால் நான் உங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்வதில் எனக்கு உடனபாடில்லை என்பதை அழுத்தமாக பதிவிடுகிறேன்..
உழைப்பு இல்லாமல் இங்கு நீங்கள் ஒரு பைசா கூட சம்பாரிக்க முடியாது...

Related Posts: