கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக இங்கிலாந்திற்கு எந்த ஆணையும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வர இங்கிலாந்திற்கு உத்தரவிட கோரி அனைத்திந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோஹினூர் வைரத்தை கொண்டு வருவது தொடர்பாக இந்தியாவில் உள்ள நீதிமன்றம் எப்படி இங்கிலாந்திற்கு உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பினர்.
அதே போன்று இங்கிலாந்து கோஹினூர் வைரத்தை ஏலம் விடக் கூடாது என இந்திய நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும் கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வர இங்கிலாந்திற்கு உத்தரவிட கோரி அனைத்திந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோஹினூர் வைரத்தை கொண்டு வருவது தொடர்பாக இந்தியாவில் உள்ள நீதிமன்றம் எப்படி இங்கிலாந்திற்கு உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பினர்.
அதே போன்று இங்கிலாந்து கோஹினூர் வைரத்தை ஏலம் விடக் கூடாது என இந்திய நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும் கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.