வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 17 வது நாளாக போராட்டம்! April 28, 2017

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 17 வது நாளாக போராட்டம்!


ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 17 வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டத்தில் பொதுமக்களுடன் நாயும் சேர்ந்து முக்காடு போடும் நூதன எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாம் கட்டமாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 17 வது நாளாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்களும்  பெண்களும் போராட்ட களத்தில் அமைதியாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

இதனைதொடர்ந்து தலையில் முக்காடு போட்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது நாய் ஒன்று பொதுமக்களுடன் சேர்ந்து முக்காடு போட்டப்படி போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது