வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தப்பி பிழைப்பது சந்தேகம் தான்..!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதான டி.டி.வி. தினகரனுக்கு,
5 நாள் போலீஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவரை சென்னை அழைத்துவர டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து, டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டார்.
அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று தினகரனை டெல்லி போலீஸ் சென்னை அழைத்து வருகிறது.
சென்னையில் அவரிடம் பணப்பட்டுவாடா எப்படி ஆரம்பித்தது என்பது குறித்து விசாரணை நடைபெறும்.
பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://kaalaimalar.net/modi-count-down-starts-on-dinakaran-case/