ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்! April 30, 2017

மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!


இந்தி அல்லாத மொழி திரைப்படங்களுக்கு சப் டைட்டில் போடக்கூறும் நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், “ கடந்த 6 வருடமாகவே அரசு நிர்வாக முடங்கிபோய் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா இறந்த பிறகு  இந்த அரசு செயலற்று காணப்படுகிறது.இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசு தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது. எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அதற்கு இந்தி மொழியில் ‘சப்டைட்டல்’ போடவேண்டும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் தொடர்ந்து திமுக மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டிடுக்கிறது" என தெரிவித்தார்