ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

கோவையில் காரில் துப்பாக்கியுடன் சுற்றிய கும்பல்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காரில் துப்பாக்கியுடன் வந்த கும்பலை பிடித்து புலனாய்வுபிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை ஆறு பேர் கொண்ட  கும்பல் ஒன்று தனி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தது.  அந்தக் கும்பலை தஞ்சாவூரில் இருந்து பின் தொடர்ந்து வந்த புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு பேரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 15  துப்பாக்கி குண்டுகளைக் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சூலூர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும், துப்பாக்கி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த போலீசார், அவர்கள் துப்பாக்கியுடன் கோவைக்கு வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
http://kaalaimalar.net/mob-surrounded-car-gun-coimbatore/