வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பாஜகவின் இரு பிரிவினரிடையே கடும் மோதலால் பரபரப்பு! April 27, 2017

பாஜகவின் இரு பிரிவினரிடையே கடும் மோதலால் பரபரப்பு!


கர்நாடகாவில் எடியூரப்பா மற்றும் ஈஸ்வரப்பாவின் தொண்டர்கள் திடீரென மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் பாஜக-வின் பிஜேபி பச்சாவோ என்ற பெயரில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் எதிரும் புதிருமாக உள்ள எடியூரப்பாவும், ஈஸ்வரப்பாவும் கலந்து கொண்டனர். அப்போது ஈஸ்வரப்பா ஆதரவாளர்கள் சிலர் எடியூரப்பாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

இதற்கு எடியூரப்பா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஈஸ்வரப்பா ஆதரவாளர்கள் எடியூரப்பா ஆதரவாளர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.