வியாழன், 27 ஏப்ரல், 2017

மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு உத்தரவு! April 27, 2017




சென்னை அருகே நடுகடலில் இரு கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில், அப்பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி  இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதனையடுத்து கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெயினால் கடல் வளம், மீன் மற்றும் கடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரினங்கள் அழிந்தது.

இது தொடர்பாக இராயபுரம் மீனவர் சங்க நிர்வாகி கே.ஆர்.செல்வராஜ்குமார் மற்றும் வழக்கறிஞர் சரவண தட்சிணாமூர்த்தி ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் அமர்வு முன்பு வந்தது.

கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இப்பிரச்சனை குறித்து ஒரு கூட்டத்தை கூட்டி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இழப்பீட்டை கணக்கிடவும், மறுசீரமைப்பு பணிகள் குறித்து உரிய ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்ட நீதிபதிகள். இந்த வழக்கை ஜுலை 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts:

  • விசாரணையும் உங்கள் மீது கேட்க மாட்டார்கள் ‪#‎விழிப்புணர்வு_பதிவு‬அதிகம் ஷேர் செய்யுங்கள் ரோடு விபத்தில் காயமடைந்தவருக்கு தாராளமாக யார் வேண்டுமானாலும் முதலுதவி செய்து அவர்களை மீட்டு மருத்துவ… Read More
  • C.F.L .பல்புகள் உடைந்தால்...? C.F.L .பல்புகள் உடைந்தால்...? என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இ… Read More
  • Hadis இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பரு… Read More
  • ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் Opinion: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் விலகுவதால் இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் சுதந்திர எழுச்சி பிரிட்டனில் அதிகமாக வளர்ந்து வரும் தற்போ… Read More
  • பிர்அவ்ன் விடயத்தில் மூக்குடைந்த எந்தவொரு கருத்து சொல்லப்பட்டாலும் அதை ஆய்வு செய்து சரி தவறை அறிவதற்கு முற்படாமல், அதை சொன்ன நபர் யார், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவரா? அப்படியான… Read More