வெள்ளி, 28 ஏப்ரல், 2017

காட்டுதர்பாருடன் மிரட்டும் காவி..! போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன் என மிரட்டிய பாஜக பெண் எம்.பி – நேரடி வீடியோ !! க்களாட்சி இந்தியா மன்னராட்சியாகிறதா..?

உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக எம்.எல்.ஏ. கேசர் சிங், வங்கி அதிகாரி ஒருவரை தாக்கிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ராவத், போலீஸ் அதிகாரியை கடுமையாக மிரட்டியுள்ளார்.
இந்த தகவல் அறிந்து செய்தியாளர்கள் அவரை அணுகி பேட்டி கண்டபோது, காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார்.
காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கன்னியக்குறைவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டிய அவர், போலீஸ் அதிகாரி இந்த மாவட்டத்திலேயே இருக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பாஜக பெண் எம்.பி. பிரியங்கா சிங் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று  மிரட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காட்டுதர்பாருடன் மிரட்டும் காவி..! போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன் என மிரட்டிய பாஜக பெண் எம்.பி – நேரடி வீடியோ !! க்களாட்சி இந்தியா மன்னராட்சியாகிறதா..?

http://kaalaimalar.net/barabanki-mp-priyanka-singh-rawat-threatens-asp-says-will-skin-you-alive/