ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3 ஆக நிர்ணயம்?

அனைத்து முறைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கும் ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிஐஐ ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்துக்கு ஒரு யூனிட் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நீர், அனல், சூரியசக்தி, காற்றாலை என எல்லா மின்சாரத்துக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான மின்சார இணைப்புக்கு கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.