வியாழன், 27 ஏப்ரல், 2017

இந்திய மீனவர்கள் 23 பேரை கைதுசெய்த பாக்., கடற்படை

இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 23 இந்திய மீனவர்களைக் கைதுசெய்துள்ளது, பாகிஸ்தான் கடற்படை.
navy
அரபிக்கடல் எல்லையில் மீன்பிடித்துவரும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்துவருகின்றனர். இந்த நிலையில், குஜராத் கடற்பகுதியில் இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்து வந்த 23 மீனவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளது, பாகிஸ்தான் கடற்படை. கைதுசெய்யப்பட்டுள்ள 23 மீனவர்களும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படகுகள், வலைகள் உள்பட்ட உடைமைகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் பறிமுதல்செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரமான போர்பந்தர் அருகே, ஜக்கு என்ற பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், குஜராத்தில் வலுத்து வருகின்றன. மேலும், குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைதுசெய்து வருவதற்கு, அங்கு பலத்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.