சனி, 29 ஏப்ரல், 2017

ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் தமிழர்! April 29, 2017

ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் தமிழர்!


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த 2016ம் ஆண்டு 1,285 கோடியே 50 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவரது செயல்பாட்டின் கீழ் செயல்படும் கூகுள் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு புதிய ஸ்மார்ட் போன்கள், ஹெட்செட்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தின. 

இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் 6 லட்சம் டாலர்களை சம்பளமாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி, இந்த தொகை சுமார் ஆயிரத்து 285 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு சுந்தர் பிச்சை 6 லட்சத்து 2,500 டாலர்களை சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.